செந்தூல் ஆலயம் காக்கப்படும் – செனட்டர் க.சரஸ்வதி நம்பிக்கை

செந்தூல் ஸ்ரீ நாகம்மன் ஆலயம் உடைக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய வேளையில் சுமூகமான தீர்வை நோக்கி செயல்பட கடந்த காலக் கசப்பான அனுபவங்களைக் கடந்து, ஆலய நிர்வாகத்தினரை ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்கள் அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.

செந்தூல் கோயிலின் தலைவர் திரு.இரமணி சுப்பையா, செயலாளர் ஹரிஹரன், பெருளாளர் திருமதி வானதி ஆகியோர் ஒற்றுமை துறையின் அலுவலகத்தில் சந்தித்து கோயில் தொடர்பாகக் கலந்துரையடினர்.

இதற்கு முன்னதாக கூட்டரசு வளாக அமைச்சர் DR.ZALIHA உடனான சந்திப்பில் சட்டரீதியாக இக்கோயிலைக் காக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக நம்பிக்கை அளித்த அவர், தற்போது அக்கோயிலின் நிர்வாகத்தினரையும் சந்தித்து கோயிலின் ஆவண விவரங்களைத் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகத்தினருடன் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி