கேப்டனுக்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ்வரன் நேரில் இரங்கல்

அண்மையில் உடல் நலக் குறைவால் காலமான நடிகரும், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவருமான கேப்டன்  விஜயாகாந்த்துக்கு மலேசியாவில் துடிப்புமிக்க இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு R.யுனேஸ்வரன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கேப்டன்  விஜயகாந்த் வீட்டில் மாண்புமிகு R.YUNESWARAN

இன்று கேப்டனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி, அவரின் வீட்டுக்கும் சென்று திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய் பிரபாகரனைச் சந்தித்து, மலேசிய மக்கள் நீதி கட்சியான PKR சார்பாகவும்,  மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சார்பாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெர்வித்தார்.

கேப்டன்  விஜயகாந்த் நினைவிடத்தில் மாண்புமிகு R.YUNESWARAN

கேப்டனின் நினைவிடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காகக் குவிந்த வண்ணம் இருப்பதாகவும்,  அங்கேயும் வருகை தரும் மக்களுக்கு உணவு வழங்கி அவரது கொள்கையை பின் பற்றி வருவது தம்மை நெகிழ்ச்சி அடையச் செய்ததாகவும், கேப்டன் செய்த தர்மத்தையும், நல்ல காரியங்களையும் தம்மால் கண்ணாரக் கண்டு உணர முடிந்ததாகவும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு R.யுனேஸ்வரன் தெரிவித்தார்.