மலேசியாவின் உந்து சக்தியாக இந்தியர்கள்! – பிரதமரின் தைப்பூச வாழ்த்து!

தைப்பூசத்தைக் கொண்டாடும் நாடு முழுவதும் உள்ள இந்து சமூகத்தினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தைப்பூசக் கொண்டாட்டம் முன்னெப்போதையும் விட மிகவும் கொண்டாட்டமாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது மற்றும் நடைமுறையில்  ஒருவருக்கொருவர் உரிமைகளை மதிக்கிறது. எனவே, இந்து சமூகத்தைச் சேர்ந்த எனது நண்பர்கள் தங்கள் முயற்சிகள், ஒழுக்கம், மதிப்புகள் மற்றும் மனித மனப்பான்மை ஆகியவற்றை மேம்படுத்தி, நமது அன்புக்குரிய மலேசியாவின் உந்து சக்தியாகத் திகழ்வார்கள். என்று அவர் கூறினார்!