மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!
|

மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைவராக மலேசியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் பரமேஸ்வரன் நியமிக்கப்படுவதாகப் பிரதமர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைவராக இருந்த ரமணன் ராமகிருஷ்ணன் தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால் இந்த மாற்றும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இனி மித்ராவின் தலைவராகப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார்…

இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.
|

இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.

2024 ஆம் ஆண்டுப் பள்ளிக் காலாண்டு தொடங்கவிருக்கும் நிலையில் பாங்கி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் 60 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிட்சான், காஜாங் நகராண்மைக் கழக ஆட்சியர் சங்கிதா சந்திரமோகன், தொழிலதிபர் டத்தோ பிரபாகரன், இஸ்மா தலைவர் கவிதா செல்வின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாகச் சுமார் 60 மாணவர்களுக்கு ரி.ம.50 மதிப்பிலான மைடீன் காசோலை வழங்கப்பட்டது. ஒரு மாணவருக்கு அடிப்படைக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது…

எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்
|

எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்

(ஜே.யோகராஜன், ச.சர்வேந்திரன்) கோலாலம்பூர், ஜன. 10 –எஸ்.எம்.பி கோர்ப் ஏற்பாட்டில் பிளாட்டினம் சென்ட்ரல், கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சினரோடு நிகழ்ந்த சந்திப்பில்டத்தோ ரமணன் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார்.எஸ்.எம்.இ கோர்பானது ஏராளமான செயல்திட்டத்தையும் வழிவகைகளையும் 2024இல் தொழில்முனைவோருக்குத் திரளாக திரட்டியுள்ளது என்று டத்தோ ரமணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எஸ்.எம்.இ கோர்ப்பின் செயல்திட்டங்களாக, கடனுதவி, வர்த்தக உரிமம், திறன்படும் வர்த்தக மேம்பாடு, பீப் எனும் இஸ்லாமிய வர்த்தக மேம்பாட்டு திட்டம், ஜிஇபி எனும் வெளிதொடர்பு…

வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

புத்ராஜெயா, ஜன. 10-சபா மலேசியா பல்கலைக்கழகத்தின் (யூஎம்எஸ்) குடிநீர் விநியோக பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்தாண்டு முப்பது லட்சம் வெள்ளி நிதியுதவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. ஆனால்இதுவரை அப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அந்தப் பணம் என்ன ஆனது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேள்வியெழுப்பினார். அப்பல்கலைக்கழகத்திற்கு நேற்றுமுன்தினம் உயர்கல்வியமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் வருகை மேற்கொண்ட வேளையில், குடிநீர் விநியோகம் மோசமாக இருப்பது குறித்து அவரிடம் மாணவர்கள் புகார் கூறினர் என்று நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்….

சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு
|

சிறார் பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் உயர்வு

கோலாலம்பூர், ஜன. 10-நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பீதியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் துறைசார் சீர்திருத்தம்) டத்தோஸ்ரீஅஸாலினா ஒஸ்மான் நேற்று தெரிவித்தார். பாலியல் குற்றங்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து கடந்த 2023ஆம் ஆண்டுவரை 6,900 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.ஆயினும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,570 குழந்தைகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பல சம்பவங்கள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்திருக்காது என்பதால் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்…

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது
|

அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனை தலையிடாது

கோலாலம்பூர், ஜன. 10-அரசியல் சித்து விளையாட்டுகளில் அரண்மனை தலையிடாது என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா உறுதியளித்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.நாட்டைத் தொடர்ந்து நிர்வகித்து வருமாறு பிரதமர் எனும் வகையில் தமக்கும் மடானி அரசாங்கத்திற்கும் அவர் கட்டளையிட்டுள்ளார் என்றும் தமது முகநூல் பக்கத்தில் அன்வார் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கும் மாமன்னருக்கும் இடையே நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய சந்திப்பில் அந்த விவகாரம் பரிமாறப்பட்டது.நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தும்படி பிரதமர்…

அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை
|

அன்வாரை வீழ்த்தும் வதந்திகளும் புரளிகளும் மக்கள் நம்பத் தயாராக இல்லை

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு சதித்திட்டங்கள் அரங்கேற்றம் காணுவதாக வதந்திகளும் புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட  மொழிகளில் புலமைபெற வேண்டியது அவசியம் அன்வார் வலியுறுத்தல்
|

ஒன்றுக்கும் மேற்பட்ட  மொழிகளில் புலமைபெற வேண்டியது அவசியம் அன்வார் வலியுறுத்தல்

கோலாலம்பூர்,  ஜன. 6- தேசிய மொழிக்குப் பாதகம் ஏற்படும் வகையில்  ஆங்கில மொழியின் வளர்ச்சிக்கு  தாம்  முக்கியத்துவம்  அளிக்கவில்லை  என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.  அதே நேரத்தில், ஆங்கில மொழிக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் மலாய் மொழியை தாம் முன்னிறுத்தவில்லை என்றும் அவர் விளக்கினார்.  உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன என்று  கோலாலம்பூர்  உலக வாணிக மையத்தில்   உயர்கல்வி  அமைச்சின்…

பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

சிரம்பான், ஜன. 5 –மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) பிடிபடுவதற்கு முன்னர், லஞ்ச ஊழலில் ஈடுபடும் எண்ணம் ஏதாவது இருந்தால் அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தகைய ஒழுங்கீனமற்ற செயலில் அரசாங்க ஊழியர்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது நேரடியாக விசாரணை நடத்த எம்ஏசிசிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் தெரிவித்தார். “நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழல்…

டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு

டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜன. 5-முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஸைனுடினுக்கு எதிராக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பில் நால்வரிடமிருந்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் ( எம்ஏசிசி) நேற்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. ஒரு சில மணிநேரத்திற்கு முன்பே வழங்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று அந்நால்வரும் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். ஆயினும், அவர்களோடு தத்தம் வழக்கறிஞர்கள் உடன்வர முடியாது என்று எம்ஏசிசி அதிகாரிகள் தடை விதித்தனர். இதற்கு அந்த வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். விசாரணை அறைக்குள் நுழைய…