இந்திய சமுதாயத்தைப் புறக்கணிக்கிறேனா? – பிரதமர் விளக்கம்
|

இந்திய சமுதாயத்தைப் புறக்கணிக்கிறேனா? – பிரதமர் விளக்கம்

ஒற்றுமை அரசாங்கம் இந்திய சமூகத்தின் நலனை ஒருபோதும் புறக்கணிக்கவில்லை, மாறாக  இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவ பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அல்லது செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தினரின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பினாங்கில் கடுமையான வறுமையை ஒழித்ததன் வெற்றியை மேற்கோள் காட்டிய அவர்,…

அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு;அக்டோபரில் அறிவிக்கப்படும்
|

அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு;அக்டோபரில் அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஏப். 4-வரும் அக்டோபர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வேளையில், அரசு சேவைத்துறைக்கான புதிய சம்பளத் திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.புதிய சம்பளத் திட்டம் மீதான பொதுச்சேவை ஊதியமுறை ஆய்வு (எஸ்எஸ்பிஏ) இறுதிக் கட்டத்தில் உள்ளது. மேல்பரிசீலனைக்காக அமைச்சரவையிடம் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பிரதமர்துறை அமைச்சர் ( கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலீஹா முஸ்தாபா கூறினார்.அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு மீது அரசாங்கம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எஸ்எஸ்பிஏ திட்டத்தை…

மன்னரிடம் மன்னிப்புக் கோரினார் “கேகே மார்ட்” நிறுவனர்
|

மன்னரிடம் மன்னிப்புக் கோரினார் “கேகே மார்ட்” நிறுவனர்

கோலாலம்பூர், ஏப். 4-“அல்லாஹ்” காலுறை விவகாரம் தொடர்பாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிடம் “கேகே மார்ட்” விற்பனையகத்தின் நிறுவனர் சாய் கீ கான் நேற்று மன்னிப்புக் கோரினார்.பதினைந்து நிமிடங்களுக்கு நீடித்த சந்திப்பின்போது கேகே மார்ட் விற்பனையகத்தில் “அல்லாஹ்” எனும் வார்த்தை பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்கப்பட்டதற்காக கேகே சாய் என அறியப்படுபவரான சாய் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டார்.அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்று அரச பத்திரிகை அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில்…

சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியை துறந்தார் தெங்கு ஸஃப்ருல்
|

சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியை துறந்தார் தெங்கு ஸஃப்ருல்

கோலாலம்பூர், ஏப். 2-சிலாங்கூர் அம்னோவின் பொருளாளர் பதவியிலிருந்து தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் விலகியுள்ளார். அம்மாநில கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்பதவியிலிருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று தாம் கருதுவதாகவும்முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான அவர் கூறினார்.கூட்டரசு நிலையில் உறவு சீராக உள்ள நிலையில், இதர கட்சிகளுடன் அம்னோ கொண்டுள்ள உறவினால் அக்கட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனும் கருத்து…

இரண்டாம் கட்ட ரஹ்மா உதவிநிதி;புதன்கிழமை முதல் வழங்கப்படும்
|

இரண்டாம் கட்ட ரஹ்மா உதவிநிதி;புதன்கிழமை முதல் வழங்கப்படும்

கோலாலம்பூர், ஏப். 2-பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவிநிதி நாளை புதன்கிழமையிலிருந்து விநியோகிக்கப்படும். இத்திட்டத்தின்கீழ் 84 லட்சம் மக்களுக்கு100 வெள்ளி முதல் 650 வெள்ளிவரை உதவிநிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சு நேற்று தெரிவித்தது.குடும்ப வருமானம் 1,500வெள்ளிக்கும் குறைவாக உள்ளவர்கள் 150 முதல் 650 வெள்ளி வரையிலும் குடும்ப வருமானம் 2,500 வெள்ளி முதல் 5,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள் 100 வெள்ளி முதல் 300வெள்ளி வரையிலும் உதவிநிதி பெறுவார்கள் என்று அது…

ஊழல்வாதிகளை விடாதீர்கள்!எம்ஏசிசிக்கு பேரரசர் வலியுறுத்தல்
|

ஊழல்வாதிகளை விடாதீர்கள்!எம்ஏசிசிக்கு பேரரசர் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஏப். 2-பேரரசராகப் பொறுப்பு வகிக்கப் போகும் ஐந்தாண்டு காலகட்டத்தில் ஊழலுக்கு எதிரான போராட்டம்தான் தமது தலையாய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைவர் அஸாம் பாக்கியுடனான சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். எம்ஏசிசி கைகொண்டுவரும் ஆகக் கடைசி நிலவரங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அச்சந்திப்பு நடைபெற்றது. “நான் ஏற்கெனவே அறிவித்தபடி, என்னுடைய தேனிலவு முடிந்து விட்டது. தேனீக்களைப் பிடிப்பதுதான்…

நட்பு நாடுகளின் மக்களுக்கு நன்மை… தொடர்ந்து வளரட்டும் இந்தியா – மலேசியா உறவு! – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

நட்பு நாடுகளின் மக்களுக்கு நன்மை… தொடர்ந்து வளரட்டும் இந்தியா – மலேசியா உறவு! – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் Dr. S. ஜெய்சங்கருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வர்த்தகம், கல்வி, விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார். சமீபத்தில் மலேசியா அரிசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டபோது உதவியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது பாராட்டுகளைத்…

மித்ராவின் மூலம் இந்திய சமுதாயத்தில் உருமாற்றம் ஏற்படும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவோம்
|

மித்ராவின் மூலம் இந்திய சமுதாயத்தில் உருமாற்றம் ஏற்படும் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் காட்டுவோம்

–செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இஷாந்தினி தமிழரசன்லாவண்யா ரவிச்சந்திரன் புத்ராஜெயா, மார்ச் 22-இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மக்களை பொருளாதார துறையில் ஈடுபடுத்துதல் சிறந்ததாகும். இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மாற்றுவதற்கான புதிய சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் கண்டு புதுமையான தீர்வுகளைப் பற்றி விவாதிப்பதே மித்ராவின் இந்த மூன்று நாள் பட்டறையாகும்.பி40 மக்களின் சமூக பொருளாதார அடிப்படையில் மலேசிய இந்திய சமூகத்தைச் செழுமைப்படுத்துவதற்காக நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் ஒருங்கிணைப்பாகும் இது என்று ஒற்றுமை துறையின் துணை அமைச்சர் செனட்டர்…

டாமன்சாராவில் வெ. 5 லட்சம் கண்டெடுத்தார் பாதுகாவலர்
|

டாமன்சாராவில் வெ. 5 லட்சம் கண்டெடுத்தார் பாதுகாவலர்

(இரா. கோபி) சுபாங் ஜெயா, மார்ச் 22-நேற்று காலை 8 மணியளவில் டாமன் சாராவிலுள்ள ஒரு பேரங்காடியில் கார் நிறுத்தும் இடத்தில் ஒரு துணி பெட்டி கிடப்பதைக் கண்டு அதை திறந்து பார்த்து, அதில் பணம் இருப்பதைக்கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் பின் ஓமார் தெரிவித்தார்.அங்கு விரைந்த போலீசார் அந்த பணத்தை மீட்டு சோதனை மேற்கொண்டதில் அதில் 5 லட்சம் வெள்ளி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.அந்த பணம்…

ஆதாயத்திற்காக சிறுபான்மையினரை அவமதிக்கக் கூடாது பிரதமர் அன்வார் வலியுறுத்தல்
|

ஆதாயத்திற்காக சிறுபான்மையினரை அவமதிக்கக் கூடாது பிரதமர் அன்வார் வலியுறுத்தல்

புத்ராஜெயா, மார்ச் 22-மற்றவர்களுக்கு எதிராக கூச்சலிட்டோ சத்தமிட்டோ எதனையும் அடைய நினைக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவுறுத்தினார்.மற்றவர்களை அவமதிப்பதற்காக கூச்சலிடுவதன் வாயிலாகவோ உரக்க சத்தமிடுவதாலோ எந்த லாபமும் வெற்றியும் நமக்கு கிடைக்கப் போவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார். புத்ராஜெயாவில் அரசு ஊழியர்களுடன் நேற்று நடைபெற்ற மலேசியா மடானி கலந்துரையாடலின்போது பிரதமர் அவ்வாறு கூறினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.மலாய்க்காரர்கள், மலாய்மொழி, மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமைகள்…