இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
|

இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோலாலம்பூர், மார்ச் 4-இந்து மதத்தைச் சார்ந்தவர்களை குறிப்பாக ஆண்டாள், கம்பர், கம்பராமாயணத்தைத் தாக்கிப் பேசியதன் காரணமாக கவிஞர் வைரமுத்துவின் மலேசிய வருகையை இங்குள்ள இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.நேற்று தமிழ் மலரின் முதல் பக்கச் செய்தியில் மஹிமா எனப்படும் மலேசிய இந்து கோயில்களின் அமைப்புச் செயலாளர் பாலகுருநாதனின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த செய்தியை கண்ணுற்ற நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், தமிழ் மலரைத் தொடர்பு கொண்டு வைரமுத்து இந்த நாட்டுக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து…

2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாடு
|

2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாடு

இஷாந்தினி தமிழரசன்லாவண்யா ரவிச்சந்திரன் கோலாலம்பூர், மார்ச்.1-2023 ஆம் ஆண்டில் பொருளாதார சவால்களும் அதிக பணவீக்கமும் இருந்தாலும், எதிர்பார்ப்புகளை மீறிய நிலையில் மலேசியாவின் பொருளாதாரம் 329.5 பில்லியன் உயர்வை அடைந்துள்ளது என்று நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாட்டில் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார். உற்பத்தி, சேவை, முதன்மைத் துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலீடுகளால் நாட்டின் பொருளாதாரம் செழித்தோங்குவதோடு மட்டுமின்றி,…

ஒற்றுமைத்துறை அமைச்சின் மக்கள் மத்தியஸ்தர்களாக ஐந்து இந்தியர்கள் நியமனம்
|

ஒற்றுமைத்துறை அமைச்சின் மக்கள் மத்தியஸ்தர்களாக ஐந்து இந்தியர்கள் நியமனம்

பினாங்கு, மார்ச் 1 –மக்களிடையே நிலவும் பிரச்சனைகளுக்கு நடுநிலையாக இருந்து,தீர்வு காணும் பிரதிநிதிகளாக தேசிய ஒற்றுமைத் துறையில் கீழ் மக்களின் மத்தியஸ்தர்களாக 5 இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர்.காளிதாஸ் இராமசாமி,எம்.பத்மநாதன்,கே.முனியாண்டி,கே.முருகேஸ்வரன் மற்றும் எல்.பாலு ஆகியோராவர். அண்மையில் தலைநகரில் நடைபெற்ற நிகழ்வில்,தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் மற்றும் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரிடமிருந்து அதற்கான நியமனச் சான்றிதழ்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர். மக்கள் மத்தியில் நிலவும் எந்தவொரு தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் மத்தியஸ்தர்களாக இருந்து தீர்த்து வைக்கும் கடமையும்…

ஊழல் செய்யும் நபர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவேன்
|

ஊழல் செய்யும் நபர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவேன்

கோலாலம்பூர், மார்ச் 1-அமைச்சரவையில் இடம்பெறுள்ள எவரும் லஞ்சஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தால், அவரின் பதவி பறிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று எச்சரித்தார்.நாட்டை ஊழலிலிருந்து மீட்பதற்கு தாம் இவ்வாறு செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் சொன்னார். லஞ்சஊழல் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்படி மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) உத்தரவிட்டுள்ளேன் என்றும் அன்வார் கூறினார்.ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். பிரதமரோ அமைச்சர்களோ ஊழலில்…

தமிழ் மலர் செய்தி எதிரொலி
|

தமிழ் மலர் செய்தி எதிரொலி

கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புகள் தொடரும் லாவண்யா ரவிச்சந்திரன்கிள்ளான், மார்ச்.1-கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கணினி வகுப்புகள் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறப்புக் குழு அமைத்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடிவெடுத்தனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் நடைபெற்ற வேளையில், இது குறித்து தமிழ்மலர் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இதன் எதிரொலியாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் அப்பள்ளியில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்…

சமூக ஊடகத் தள நிறுவனங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்வதில்லை
|

சமூக ஊடகத் தள நிறுவனங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்வதில்லை

கோலாலம்பூர், பிப். 29-சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு சமூக ஊடகத் தள வழங்குநர்கள் தங்களின் சுய மதிப்பீட்டை பயன்படுத்துகின்றனர். இதில், சம்பந்தப்பட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து வரும் எந்த அறிவுறுத்தல்களையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று தொடர்பு, பல்லூடகத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.நடப்பில், சமூக ஊடகங்களில் இருக்கும் உள்ளடக்கம் தொடர்பான அறிக்கைகளை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) முகநூல், டிக்டோக், எக்ஸ் போன்ற சமூகத் ஊடகத் தள வழங்குநர்களிடம் அதன்…

செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன
|

செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன

இரா.கோபி செர்டாங், பிப்.29-ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் காவல் துறையினரின் சந்திப்புக் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் செர்டாங் மாவட்ட போலீசாரின் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்தச் சந்திப்புக் கூட்டம் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏஏ அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.சிறப்புரையாற்றிய அவர் கூறுகையில், செர்டாங் மாவட்டத்தில் 16 விழுக்காடு குற்றச்செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன.அதற்கு செர்டாங் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் சேவை தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல்…

2024 ஆம் ஆண்டின் 2-ஆவது உலக தங்க வணிகர்கள் மாநாடு
|

2024 ஆம் ஆண்டின் 2-ஆவது உலக தங்க வணிகர்கள் மாநாடு

லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன் படங்கள்: எம்.முருகன் கோலாலம்பூர், பிப்.29-பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலோக, தொழில்துறை நிபுணர்கள் 2-ஆவது முறையாகக் கலந்து கொள்ளும் 2024 ஆம் ஆண்டின் தங்க வணிகர்கள் மாநாடு மலேசியாவின் ஜேடபள்யு மேரியட் விடுதியில் நடைபெற்றது.மலேசிய தங்க வணிகர்கள் மாநாடு 2024 இல் நடைபெற்ற இந்த நுண்ணறிவு கலந்த விவாதங்கள், உலகளாவிய தங்கச் சந்தைகள் பற்றிய தெளிவான புரிதலையும் மேம்பட்ட அறிவையும் குறிப்பாக ஆசிய சந்தைகள் மிகப்பெரிய அளவில் புரிதலை பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கும் என எம்ஏஜியின்…

2023ஆம் ஆண்டின் இபிஎஃப் லாபஈவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்
|

2023ஆம் ஆண்டின் இபிஎஃப் லாபஈவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், பிப். 29-கடந்தாண்டுக்கான தனது லாபஈவு (டிவிடெண்ட்) விவரங்களை ஊழியர்கள் சேமநிதி வாரியம் ( இபிஎஃப்) ஞாயிற்றுக்கிழமையான மார்ச் 3ஆம் தேதியன்று அறிவிக்கவுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வழக்கமான சேமிப்பு மற்றும் ஷரியா சேமிப்பு மீதான லாபஈவுத் தொகையை இபிஎஃப் அறிவித்து வருகிறது.இதனிடையே, அந்த வாரியத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி அமாட் ஸூல்கர்னைன் ஒன் வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் லாபஈவுத்தொகை பற்றி அறிவிப்பார். கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 5.35 விழுக்காடு லாபஈவை விட 2023ஆம் ஆண்டுக்கான…

2022ஆம் ஆண்டில் 54 % மருத்துவ அதிகாரிகள் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகினர்
|

2022ஆம் ஆண்டில் 54 % மருத்துவ அதிகாரிகள் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகினர்

கோலாலம்பூர், பிப். 29-நாட்டின் 100,696 மருத்துவ அதிகாரிகளில் 54 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கடந்தாண்டில் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகியுள்ளனர். தனியார்துறையில் சேர்ந்து பணியாற்றுவதற்காக அவர்கள் அங்கிருந்து விலகியுள்ளனர் என்று மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பானின் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபோங் கூய் லுன் கேட்ட துணைக்கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்ளி அமாட் இதனைத் தெரிவித்தார்.பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகிய மருத்துவர்களில் 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு நடத்திய…