கேப்டனுக்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ்வரன் நேரில் இரங்கல்
|

கேப்டனுக்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ்வரன் நேரில் இரங்கல்

அண்மையில் உடல் நலக் குறைவால் காலமான நடிகரும், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவருமான கேப்டன்  விஜயாகாந்த்துக்கு மலேசியாவில் துடிப்புமிக்க இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு R.யுனேஸ்வரன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று கேப்டனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி, அவரின் வீட்டுக்கும் சென்று திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய் பிரபாகரனைச் சந்தித்து, மலேசிய மக்கள் நீதி கட்சியான PKR சார்பாகவும்,  மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சார்பாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத்…

UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.
|

UMS மாணவர்கள் போராட்டம்! அன்வார் உடனடி தீர்வு.

கடந்த கோவிட் தொற்றுக்குப் பின் பல்கலைக்கழகங்கள் இயல்பாகச் செயல்பட தொடங்கி 2 ஆண்டுகளாகிய நிலையில் சபா பல்கலைக்கழகத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கோவிட் காலத்தில் நீர் மேலாண்மை வாரியம் முறையாக நீர் வழி குழாய்களைப் பராமரிக்காமல் விட்டது தான் காரணம் என எழுந்த சர்ச்சையில் நீர் வழித்தளங்களையும் நீர் குழாய்கள் சீரமைக்கவும் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 3 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. 1056அதிகாரிகளும் ஏறத்தாழ 15000 மாணவர்கள் இந்த நீர் தட்டுப்பாட்டால் கடந்த…

கல்வியின் முக்கியத்துவத்தைப் பெற்றோர்கள் உணர வேண்டும் – YB.R.யுனேஸ்வரன்
|

கல்வியின் முக்கியத்துவத்தைப் பெற்றோர்கள் உணர வேண்டும் – YB.R.யுனேஸ்வரன்

தங்கள் பிள்ளைகள் இளங்கலைக் கல்வியை மேற்கொள்வதற்குப் பெற்றோர்களின் பங்கு இருப்பதைப் போல, தனது செகாமாட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்விக்கும் தாம் பொறுப்பு என செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ்வரன் நம்பிக்கை அளித்துள்ளார். செகாமாட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 10 இந்திய மாணவர்களுக்குப் புதிய மடிக்கணினிகள் வழங்கிய அவர் செகாமாட் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும்படி தொடர்ந்து விண்ணப்பங்களைத் தாம் பெற்று வருவதாகத் தெரிவித்தார். தற்போது ஏழ்மைநிலையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியின் பயன்பாட்டுக்காகப் புதிய…

இந்தியர்களுக்கான TEKUN நிதி அதிகப்படுத்தப்படும் – ரமணன் நம்பிக்கை!
|

இந்தியர்களுக்கான TEKUN நிதி அதிகப்படுத்தப்படும் – ரமணன் நம்பிக்கை!

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Datuk Ewon Benedick அதன் துணை அமைச்சர் DATUK RAMANAN இருவரும் சந்தித்தனர். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தில் உள்ள தேசிய இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் SPUMI இல் 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அந்த நிதியை அதிகப்படுத்தும்படி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Datuk Ewon Benedick –ஐ தாம் கேட்டுக் கொண்டுள்ளதாக அதன் துணை…

மித்ராவை வழிநடத்த செனட்டர் சரஸ்வதி தகுதியானவர் – பி.கே.ஆர் இந்தியத் தலைவர்கள் கருத்து
|

மித்ராவை வழிநடத்த செனட்டர் சரஸ்வதி தகுதியானவர் – பி.கே.ஆர் இந்தியத் தலைவர்கள் கருத்து

மித்ரா எனும் மலேசிய இந்தியர் உருமாற்று மேம்பாட்டுப் பிரிவைப் பிரதமர் துறையிலிருந்து ஒற்றுமை துறைக்கு மாற்றப்பட்டது வரவேற்கக் கூடியது என பி.கே.ஆர் இந்தியர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஒற்றுமை அமைச்சின் துணை அமைச்சராக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி நியமிக்கப்பட்டு, மித்ராவை வழிநடத்துவதற்குச் சமூக அமைப்புகள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக உலு திராம் முன்னாள் சட்டமன்றம் உறுப்பினர் கோபாலக்கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இந்திய சமுதாயத்தின் சிக்கல்கள் தொடர்பாகத் தீர்வை நோக்கி நகர்வதில்…