நட்பு நாடுகளின் மக்களுக்கு நன்மை… தொடர்ந்து வளரட்டும் இந்தியா – மலேசியா உறவு! – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

நட்பு நாடுகளின் மக்களுக்கு நன்மை… தொடர்ந்து வளரட்டும் இந்தியா – மலேசியா உறவு! – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் Dr. S. ஜெய்சங்கருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வர்த்தகம், கல்வி, விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக அன்வார் குறிப்பிட்டார். சமீபத்தில் மலேசியா அரிசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டபோது உதவியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது பாராட்டுகளைத்…