Landing Page Tamil

  • |

    எஃபிஐ பயங்கரவாதிகள் பட்டியலில் மூன்று மலேசியர்கள்

    புத்ராஜெயா, பிப். 20-அமெரிக்காவின் கூட்டரசு புலனாய்வுத்துறையின் பயங்கரவாதிகள் கண்காணிப்பு மையத்தின் பெயர்ப் பட்டியலில் மூன்று மலேசியர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அந்தப் புலனாய்வு அமைப்பிடமிருந்து கூடுதல் விளக்கம் கோரப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார். அந்த மூன்று நபர்கள் பற்றிய விவரங்களை எஃபிஐ கோரியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன காரணங்களால் அவர்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.இது குறித்து தெளிவான விளக்கம் பெறுவதற்காக இரண்டு…

  • |

    உலகை அதிரவைத்த தங்கத் தாரகை ஷாமளாராணி உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை

    கோலாலம்பூர், பிப். 20-நாட்டின் தேசிய கராத்தே வீராங்கனை சி.ஷாமளாராணி, உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று உலகையே அதிரச் செய்துள்ளார்.நேற்று முந்தினம் சைபிரஸ் லார்னாக்காவில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் 25 வயது நிரம்பிய தங்கத் தாரகை ஷாமளாராணி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவா ரோட்டிகுவெஸை 9:5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.பெண்கள் பிரிவில் 50 கிலோ கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ள ஷாமளாராணி, இதற்கு முன்னர் சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை…

  • |

    கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்றுங்கள்

    ஆர்.ரமணி ஜோர்ஜ்டவுன், பிப்.19-பினாங்கு மாநில வீடமைப்பு, சுற்றுச்சூழலுக்கான ஆட்சிக்குழு, பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பினாங்கு மாநில மலேசிய இந்து சங்கம், தெலுக் பஹாங்கில் உள்ள ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகம் ஆகியவை வரும் பிப்.24ஆம் தேதி பினாங்கில் உள்ள தெலுக் பஹாங்கில் கொண்டாடப்படும் மிதக்கும் தேர்த் திருவிழாவான மாசி மக தெப்பத் திருவிழாவின் போது எந்தவிதமான செயற்கை நுரை அல்லது நெகிழிப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்து பக்தர்களைக் கேட்டுக்கொள்கின்றன. தெலுக் பஹாங்கில் உள்ள…

  • |

    மித்ராவில் புதிய தலைமை இயக்குநர் நியமனம்!

    மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைமை இயக்குநராக இரவிக்குமார் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். மித்ராவின் புதிய இலக்குகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பாக நேற்று ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் ரவிக்குமார் சுப்பையா அவர்களின் நியமனமானது, அரசு பொதுச் சேவை ஊழியர் துறையின் நேரடி நியமனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர்களின் அடிப்படை சிக்கல்களைக் கலைத்து மித்ராவின்…

  • |

    தமிழ் அறவாரியத்தின் உலகத் தாய்மொழி நாள்

    ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் அறவாரியத்தின் தலைமையில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), LLG எனப்படும் மலேசியக் கலாச்சார மேம்பாட்டு மையம், மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JOAS), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (DONG ZONG), KLSCAH எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம், மலேசியச் சீனப்பள்ளி ஆசிரியர் சங்கம் என மலேசியாவில் 8…

  • |

    ZAHID HAMIDI மீது மகாதீர் வழக்கு!

    மகாதீர் பிறப்பால் ஒரு மலாய்க்காரர் இல்லை என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான  ZAHID HAMIDI கருத்து தெரிவித்த நிலையில் ZAHID HAMIDI மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டதாக மகாதீரின் வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaimi தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மகாதீரைக் குறித்து பேசும் போது மகாதீரைக் குறிப்பிடுவதற்காகக் குட்டி எனும் அடைமொழியை அவர் பயன்படுத்தியதாகவும் இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி KELANA JAYA வில் நடந்த அம்னோ…

  • |

    மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!

    மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைவராக மலேசியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் பரமேஸ்வரன் நியமிக்கப்படுவதாகப் பிரதமர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைவராக இருந்த ரமணன் ராமகிருஷ்ணன் தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால் இந்த மாற்றும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இனி மித்ராவின் தலைவராகப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார்…

  • |

    திட்டமிட்டபடி பங்கோர் தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்படும் சிறப்பு அதிகாரி தியாகராஜ் அறிவிப்பு

    பங்கோர், பிப்.7-பேராக் மாநிலத்தில் உள்ள கடற்கரையில் அமைந்துள்ள பங்கோர் தேசியவகை தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்தின் கட்டுமானத்தை அதன் குத்தகையாளர் கட்டுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதை அடுத்து அப்பள்ளியின் நிலவரம் குறித்து அங்குள்ள பொறுப்பாளர்களிடம் தாம் கலந்தாலோசித்ததாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக்கின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் கூறினார். பள்ளியின் புதிய கட்டடத்தை கடந்தாண்டு ஜூலை 3ஆம் தேதி கட்டி முடித்திருக்க வேண்டும். இருப்பினும் அந்த குத்தகை நிறுவனத்திற்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை கட்டுமானத்திற்கான கால…

  • |

    ஹன்னாவுக்கு எதிரான அவதூறு வழக்கு மீட்பு

    கோலாலம்பூர், பிப். 7-சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவுக்கு எதிராக தாம் தொடுத்திருந்த அவதூறு வழக்கை மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கமாருல் ஸமான் யூசோப் மீட்டுக் கொண்டுள்ளார்.இன, சமய உணர்வுகளைத் தூண்டிவிடுவதாக தம்மைப் பற்றி ஹன்னா அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது கமாருல் வழக்குத் தொடுத்திருந்தார்.அந்த வழக்கைத் தொடர்வதில்லை எனத் தெரிவிக்கும் நோட்டீஸ் ஒன்றை ஜனவரி 30ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் கமாருல் தாக்கல் செய்தார் என்று ஹன்னா இயோ நேற்று தெரிவித்தார். கமாருல் தமக்கு…

  • |

    மகாதீரின் மகன்களுக்கு எம்ஏசிசி எச்சரிக்கை!

    கூச்சிங், பிப். 7 –நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களுக்குள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கத் தவறினால், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் இரண்டு மகன்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்று, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி கூறியுள்ளார். காலஅவகாசம் நெருங்கி வரும் வேளையில், மிர்ஸான் மகாதீரும் டான் ஸ்ரீ மொக்ஷானி மகாதீரும் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை. அவ்வாறு செய்யுமாறு கோரும் நோட்டிஸ்…